பாடசாலை மாணவர்களுக்கு பேருந்து சேவை ஆரம்பம்!
Wednesday, February 21st, 2018இயக்கச்சி பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைவாக இப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இயக்கச்சி, வாடியடி, புளியடிச் சந்தியிலிருந்து தினமும் காலை 6.20 மணிக்குப் புறப்படும் பேருந்து சங்கத்தார் வயல், கோயில் வயல், ஊடாகப் பயணித்து இயக்கச்சி சந்தியை சென்றடைந்து மீண்டும் ஏ-9 வீதியூடாக பயணித்து கிளி.பளை மத்திய கல்லூரியை காலை 7.20 மணியளவில் வந்தடையும். தொடர்ந்து பாடசாலை முடிந்தவுடன் மீண்டும் பயணித்த வீதியூடாக இயக்கச்சி வாடியடி
புளியடிச் சந்தியை பிற்பகல் வந்தடையும். எனவே பாடசாலை மாணவர்கள் இப் பேருந்தை பயன்;படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
Related posts:
ஆவா வுடன் தொடர்புடைய ஒருவர் கைது!
இலங்கையின் விவசாயத்துறைக்கு உதவத் தயாராகும் இந்தியா - 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்கமதிக்கும் ந...
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்கா...
|
|