பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!

பாடசாலை அதிபர் ஒருவர் அளவெட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலய இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட நடேஸ்வரா கல்லூரியின் அதிபரான அமிர்தலிங்கம் (வயது-58) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று அளவெட்டி பகுதியில் உள்ள அதிபரின் வீட்டில் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
BPL இல் பங்கேற்கும் வீரர்களுக்கு எச்சரிக்கை ?
கொழும்பில் உள்ள சீஷெல்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகராலயத்தை மூட தீர்மானம்!
அரசியல் பழிவாங்கல் பரிந்துரைகளை அமுல்படுத்தும் யோசனை - நாடாளுமன்றில் 21 ஆம் திகதி முன்வைப்பு!
|
|