பாடசாலையில் பறிக்கப்பட்ட மணல் களவு – மறைகாணியில் அது பதிவாகியுள்ளது!

Thursday, December 27th, 2018

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெறும் கட்டுமானப் பணிக்காக பறிக்கப்பட்டிருந்த மணல் களவாடப்பட்டுள்ளது என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடசாலையில் தற்போது இடம்பெறும் கட்டுமானப் பணிக்காக டிப்பர் வாகனத்தின் மூலம் பாடசாலைக்கு முன்பாக மணல் இறக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இறக்கப்பட்டிருந்த மணலை அவதானித்த சிலர்  கறுப்பு நிற கன்டர் வாகனத்தில் வந்து மணலை ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு சிலர் வாகனத்தில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளமை தொடர்பில் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மறைகாணியில் தெளிவாக பதிவாகியுள்ளதனால் திருடர்கள் அகப்படும் சூழல் காணப்படுகின்றது.

தமது எதிர்கால சந்ததிக்காகவும் புண்ணிய காரியம் கருதியும் பலரும் பாடசாலைகளுக்கு அன்பளிப்புச் செய்யும் நிலையில் தமது சொந்த நலனுக்காக இவ்வாறான இழி செயலிலும் சிலர் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

Related posts: