பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் – வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு !

Friday, September 25th, 2020

பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.

தற்போது இந்த ஆலோசனையில் எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்ரி, மற்றும் அவரது மகன் சரண், மகள் பல்லவி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் எஸ்.பி.பி.யை காண இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் வைத்தியசாலைக்கு வர உள்ளதால், அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் மருத்துவமனை தரப்பில் இன்றையதினம் மிக முக்கிய அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts: