பஸில் ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்என செய்திகள் தெரிவிக்கின்றன.
திடீரென ஏற்பட்ட முதுகுவலி காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பஸில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ம் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெல் சந்தைப்படுத்த நடவடிக்கை!
கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் நீர்வெறுப்பு நோயினால் 12 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சு தகவல்!
சர்வதேச நாணய நிதியம் தொடர்பான யோசனை 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
|
|