கடலாமையை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு பிணையில் செல்ல அனுமதி
Wednesday, March 9th, 2016கடலாமையைப் பிடித்துத் தன் வசம் வைத்திருந்த குற்றச் சாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட குருநகர் வாசியைப் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் நேற்று (08) அனுமதியளித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையிரவு குருநகர் பகுதியில் படகொன்றில் கடலாமையைப் பிடித்து வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேகநபரை நேற்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்றும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது தபால் மூல வாக்களிப்பு!
30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் - புதிய வலுசக்தி அமைச்சர் கா...
அடுத்த பெரும்போகத்திற்கு 150,000 மெட்ரிக் தொன் யூரியா இறக்குமதி - விவசாய அமைச்சு தெரிவிப்பு!
|
|