நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைது!

Thursday, July 5th, 2018

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  இரு படகுகள் காங்கேசன்துறை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 மீனவர்கள் நெடுந்தீவிற்கு அண்மித்த கடற்படைப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே இன்று 05 அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 2 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படையினர் தடுத்து வைத்திருப்பதுடன், கைதுசெய்யப்பட்ட 2 மீனவர்களையும் யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts:

குடாநாட்டில் திராட்சை செய்கை கடும் வீழ்ச்சி – விவசாயிகளுக்குப் போதிய பயிற்சி வழங்கவேண்டுமென வலியுறுத...
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – ஜனாதிபத...
இலங்கை – இந்தியா இடையில் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து - இந்திய வெளிவிவகார அமைச்சர் தெர...