நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எட்டுத் தமிழக மீனவர்கள் நேற்று (19) அதிகாலை யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு விசைப்படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் நேற்றுப் பிற்பகல் கடற்படையினரால் யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும்-25 ஆம் திகதி வரை குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலையில் அரசியல் வேண்டாம் - அமைச்சர் திகாம்பரம்!
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்வ...
பொதுத் தேர்தல் நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|