நீர் முகாமைத்துவ பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
Wednesday, November 15th, 2017குடிதண்ணீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான ஐந்து நாள் வெளிநாட்டுப் பயிற்சிப் பட்டறை சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இருந்து இதற்கான பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதற்காக மாநகர, நகர, பிரதேச சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் சபை அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களை வெளிநாட்டு வளங்கள் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் என்.ஆர்.அனீஸ் கோரியுள்ளார்.
பயிற்சி நெறி எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை சிங்கப்பூர் நான்ஜாவ் தொழினுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
விண்ணப்பதாரிகள் விண்ணப்பப் படிவத்துடன் கல்வித் தகைமைகளின் போட்டோபிரதிகளுடன் விண்ணப்பம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
VAT வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் வழக்கு?
கொரோனா தொற்று: இலங்கையில் ஒரே நாளில் 54 மரணங்கள் பதிவு – அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு!
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி - மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதின...
|
|