நீர் கட்டணம் அதிகரிக்காது!
Monday, August 15th, 2016
இவ்வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என அதன் தலைவர் கே.அன்சார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு 3 வருடத்துக்கும் ஒரு முறை நீர் கட்டணத்தை உயர்த்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காரணமாக நீர் கட்டணத்தை அதிகரிக்க முடியாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு குழு அட்டகாசம்!
கொரோன அச்சுறுத்தல் - யாழ் நகரப் பகுதியின் பிரதான சந்திகளில் இராணுவம் தீவிர நடவடிக்கையில்!
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான கட்டணத்தை செலுத்த திறந்த சந்தைகளில் அமெரிக்க டொலரை...
|
|