நீர்வேலி பிரதேசத்தில் கால்நடை திருட்டு அதிகரிப்பு!
Tuesday, February 13th, 2018
நீர்வேலி பிரதேசத்தில் கால்நடை திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு. இரவுமற்றும் பட்டப்பகல் வேளைகளில் திருட்டுக்கள் இடம்பெறுகின்றன.
கடந்த வியாழக்கிழமை நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கட்டப்பட்டிருந்த இரண்டு மறி ஆடுகளும் அதன் இரண்டு குட்டிகளும் களவாடப்பட்டுள்ளன.
வீட்டின் பின்பக்கத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடர்கள் மிகவும் தந்திரமாகக் களவாடிச் சென்றுள்ளனர்.
நீர்வேலி, கோப்பாய் பிரதேசங்களில் அண்மைக் காலமாக கால்நடைகளின் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்காகக்
கட்டப்படும் கால் நடைகளும் இவ்வாறு களவாடப்பட்டு வருகின்றன என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Related posts:
இவ்வாறு சுட்டால் ஒரு நொடி கூட உயிருடன் இருக்க முடியாது! - ஹிருணிகா பிரேமச்சந்திர!
தென்மராட்சி கல்வி வலயத்தில் அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று !
|
|
|


