நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் கப்பல் கொழும்புதுறைமுகத்தைவந்தடைந்துள்ளது.
Saturday, May 27th, 2017மழைமற்றும் மண்சரிவு காரணமாகபாதிக்கப் பட்டமக்களுக்கு உதவும் வகையில் இந்தியாஒருதொகுதி நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது.
நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் ஐ. என். எஸ் க்றீச் என்றகப்பல் கொழும்புதுறைமுகத்தை இன்றையதினம் (27) வந்தடைந்துள்ளது.
நிவாரணப் பொருட்களில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாகமுன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
நிவாரணப் பொருட்களை தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்புதுறை முகத்தை வந்தடையுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே மழை மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டமக்களுக்கு இந்தியா அனுதாபத்தை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாரதி சேவை தரம் 3 இல் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
அடுத்த ஒருவாரத்திற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படாது - சிறைச்சாலைகள் திணைக்களம்!
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
|
|