நியூசிலாந்திலிருந்து 30மில்லியன் உதவிகள்!

Wednesday, May 31st, 2017

இலங்கையின் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் நியூசிலாந்து அரசாங்கம் 30.8 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக நியூசிலாந்து அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் பொதுமக்களைச் சென்றடையவுள்ளது.

நியூசிலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கெரி பிரவுண்லீ விடுத்துள்ள அறிக்கையொன்றில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கைக்குத் தேவையான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க நியூசிலாந்து தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: