நாய்களின் தொல்லையை கட்டப்படுத்துமாறு கோரிக்கை!
 Saturday, June 23rd, 2018
        
                    Saturday, June 23rd, 2018
            கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.
மேற்படி வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் நாய்க்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. இப்பகுதியில் பெரும்பாலான விபத்துக்கள் கூட நாய்களால் ஏற்படுவதாகவும் குறிப்பாக பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களே விபத்துக்குள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு கரைச்சி பிரதேச சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
நந்திக்கடல் கடலுடன் வெட்டி இணைப்பு
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!
யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        