நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க நெறி கோவை!

Thursday, April 7th, 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அத்துடன் ஒழுக்க நெறி கோவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பெயர்ப்புகளும் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன. இது சம்பந்தமான யோசனைகளையும் கருத்துக்களையும் நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகத்தில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சில சம்பவங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதிக்கும் சம்பவங்கள் என சபாநாயகர் தெரிவித்தள்ளார்..

Related posts: