நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!
Wednesday, July 13th, 2016
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடும் நடைபாதை வியாபாரிகள் பிரதேச சபைக்கு வரி செலுத்துவதில்லை.
எனவே, அனுமதியின்றி வியாபாரத்தில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என சபையின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
விபத்தில் முதியவர் காயம்!
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...
நாட்டின் நிலைமையை ஒரேநாளில் மாற்றி மீளக்கட்டியெழுப்புவது கடினம் – அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும...
|
|
|


