தொழில் வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு யாழில்!

Thursday, October 13th, 2016

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாடு முழுவதிலும் கிளைகளைக் கொண்டுள்ள முன்னனி தனியார் கம்பனியிடமிருந்து 500 வரையான தொழில் வெற்றிடங்களை பெற்றுள்ளது.

இவ் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் 2மணிவரை நடைபெறவுள்ளது. இந் நேர்முகத் தேர்விற்கு க.பொ.த உயர்தரம் மற்றும் க்.பொ.த சாதாரண தரம் வரை கல்விகற்ற 27 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், 24 வயதுக்கு மேற்படாத பெண்களும் தோற்றலாம். நேர்முகத் தேர்விற்கு தோற்ற விரும்புவோர் முக்கியமாக தங்கள் கல்விச் சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், கிராம அலுவலரின் சான்றிதழ் என்பவற்றுடன் அவசியமான ஏனைய சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்விற்கு தோற்றலாம். இவ் அரிய வாய்ப்பினை தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்வதுடன் மேலதிக விளக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை 0212219359 இலக்க மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய அலுவலக தொலைபேசியூடாகவோ அல்லது பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் நேரடியாகவோ பெற்றுக் கொள்ளலாம் என யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

vadamaradchi-league-valvai-nediyakaadu-win-1 copy

Related posts: