தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் –டில்ஷான்!

Sunday, September 11th, 2016

 

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். 17 வருடங்களாக கிரிக்கெட் மைதானத்தில் இலங்கையின் பெயரை நிலைநிறுத்திய சிறந்த வீரரான, திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியை அடுத்து அவர் ஓய்வுபெற்றார். டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே விடைபெற்ற டில்ஷான், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (09) கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: