தொழிற்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, May 10th, 2018

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வி ஆண்டில் பின்வரும் தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நீரில் வளர்ப்பு மற்றும் நீரியல் வள முகாமைத்துவ டிப்ளோமா(NVQ – 5), சுழியோடி(Nஏஞ – 4), உயிர்ப்பாதுகாப்பு(Nஏஞ – 4), வெளி இணைப்பு இயந்திர பொறிவலர்(NVQ – 4), கடலக வரைபடம் வாசித்தலும் செய்மதி தொடர்பாடலும(புPளு), கடலக மாலுமி(NVQ – 4) ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

படகினை செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை(ஊழஒளறயiளெ டுiஉநளெந) பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு கடலக மாலுமி பயிற்சி நெறியானது மிகவும் பயனள்ளதாக அமையும்.

மேற்படி பயிற்சிநெறிகளுக்கு க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் தோற்றியவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ் வழங்கப்படும்.

அனைத்து கற்கைநெறிகளும் கட்டணமின்றி நடத்தப்படுவதுடன் இக் கற்கைநெறிகளை கற்கவிரும்புவர்கள் உரிய விண்ணப்பப்படிவங்களை எமது அலுவலகத்தில் பெற்று 25.05.2018 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு தொ.இல : 021 738 8188, 071 834 9073, 077 375 5063 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ். பிராந்திய உதவிப் பணிப்பாளர் எஸ்.எஸ்.கிருணலிங்கம் அறிவித்துள்ளார்.

Related posts: