தொடர் மழையால் குடாநாட்டில் 1,869 பேர் பாதிப்பு!

Wednesday, November 23rd, 2016

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகத் தொடரும் மழை காரணமாக 521 குடும்பங்களைச் சேர்ந்த 1,869பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 292 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவமைய நிலையம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 330பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 64 குடும்பங்களைச் சேர்ந்த 232பேரும் அத்துடன் 45 வீடுகளும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 223 குடும்பங்களைச் சேர்ந்த 772பேரும் அத்துடன் 218 வீடுகளும், யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவில் 66 குடும்பங்ளைச் சேர்ந்த 249பேரும் அத்துடன் 29 வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.

viber-image24

Related posts:

தப்பியோடிய இராணுவத்தினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் - இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை!
உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
ஏப்ரல் இறுதிக்குள் அனைத்து அரச அலுவலர்களுக்கும் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் - பொது சு...