தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் இராஜினாமா!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டு வரும் பேராசிரியர் சிறிஹெட்டிகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை நேற்று அரசியல் அமைப்பு சபையிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்புச் சபை பொறுப்பேற்றுக் கொண்டதா? இல்லையா? என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.பேராசிரியர் சிறிஹெட்டிகே ஜேர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக 3 மாத காலத்திற்கு வெளிநாடு சென்றுள்ளதால் பொலிஸ் ஆணைக்குழுவில் பதில் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.இதேவேளை பேராசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
Related posts:
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கையில் யாழ் பல்கலையும் இணைவு!
காணிகளிலுள்ள பற்றைகளை உடன் துப்புரவு செய்ய அறிவுறுத்து!
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
|
|