தெல்லிப்பளையில் வெடிபொருட்கள் மீட்பு!
Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினரின ஏற்பாட்டில் “சிவதரிசனம்”
அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலை...
பயன்படுத்தப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் - பிரதமர் ...
|
|
|


