தெல்லிப்பளையில் வெடிபொருட்கள் மீட்பு!
Monday, September 26th, 2016யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பேஸ்புக் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்காக ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவிக்...
தொடரும் சீரற்ற காலநிலை - 2004 ஆம் ஆண்டு காணப்பட்ட கிரக நிலை இந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதியும் காண...
|
|