தீபாவளியை முன்னிட்டு புல்லுக்குளம் முன்பாக நடைபாதை வியாபாரம்!
Thursday, October 20th, 2016
தீபாவளிப் பண்டிகைக்கான நடைபாதை வியாபாரங்கள் அனைத்தும், யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் புல்லுக்குளத்துக்கு முன்பாகவுள்ள மாநகராட்சி மன்றத்திற்கு சொந்தமான வளாகத்தில் நடத்த அனுமதிக்கப்படும் என யாழ்.மாநகரசபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்துள்ளார்.
நடைபாதை வியாபாரிகள் எடுத்து வரும் உடுபுடவைகளை நகரின் அனைத்து இடங்களிலும் விற்பதற்கு அனுமதி வழங்கப்படாது. புல்லுக்குளத்துக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் உள்ள வளாகத்தில் மட்டும் நடைபாதை வியாபாரத்துக்கு அனுமதி வழங்கப்படும் – என்றார்.
Related posts:
வடக்கு - தெற்கு ஊடகங்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு உறுதியாக உழைக்கின்றன! அமைச்சர் கஜந்த கருணாதிலக்க
கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!
பெய்யான செய்திகள் வெளியீடு - பேஸ்புக் சமுக வலைத்தளத்துக்கு அதிரடியாக தடைவிதித்தது ரஷ்யா!
|
|