திருமலை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு – ஜனாதிபதி சிறப்புப் பரிசு!
Thursday, September 19th, 2019இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் அபூர்வ கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசு வழங்கியுள்ளார்.
ஒருவர் எழும்பி நடக்கும் போது பட்டரி ஒன்று சார்ஜ் ஆகும் உபகரணம் ஒன்றை மாணவன் தயாரித்துள்ளார். அதற்கு “Walking charger” என பெயரிட்டுள்ளார்.
திருகோணமலை, தன்தலாவ மஹா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்று வரும் சத்துர மதுமால் என்ற மாணவன் இதனை தயாரித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி ஐந்து இலட்சம் பரிசு வழங்கியுள்ளார். இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை சத்துர மதுமால் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடாநாட்டில் மீன்பிடி உற்பத்தி அதிகரிப்பு!
விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைக்க ஆறுமாத காலப்பகுதிகள் புதிய சட்டம் – அமைச்சர் நாமல் ஆராய்வு!
ஆசிரியர்களுக்குரிய மனித உள்ளார்ந்த வளம் தொடர்பான பயிற்சி தேவை - யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர்...
|
|