திருமண வீடொன்றிலிருந்து 35 பவுண் நகை கொள்ளை!

Tuesday, June 28th, 2016

யாழ். நாச்சிமார் கோவிலடியில் திருமண வீடொன்றிலிருந்து ஏழு இலட்சம் ரூபா பணம், 35 பவுண் நகை ஆகியன நேற்றுமுன்தினம் (26) அதிகாலை வேளை கொள்ளையிட்டுச் செல்லப்பட்டதாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது –

குறித்த பகுதியிலுள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை(25) திருமணம் இடம்பெற்றுள்ளது. மணப்பெண்ணான குறித்த வீட்டுக்காரர்  அன்று இரவு சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றுள்ளனர். இந்தச் சமயத்தில் வீட்டில் ஒரு சிலரே தங்கியிருந்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் ஞயிரன்று அதிகாலை வீட்டின் பின்கதவு வழியாக உள் நுழைந்து திருடியுள்ளனர்.

வீட்டிலிருந்த 35 பவுண் நகை, ஏழு இலட்சம் ரூபா பணம் மற்றும் திருமண வீட்டிற்கு வருகை தந்தவர்கள் மணமக்களுக்கு வழங்கிய அன்பளிப்புப் பணம் என்பவற்றைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வீட்டிலிருந்தவர்களுக்கு மறுநாள் காலையே தெரியவந்துள்ளது. இதனையடுத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட் டதையடுத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Related posts: