தாவடியில் வழிப்பறி!

Tuesday, April 12th, 2016

தாவடி, பகுதியில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் 11 பவுண் தாலிக்கொடி, நேற்று (11) இரவு அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபரொருவர், தாலியை அறுத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: