தரித்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடைஞ்சல்!
Wednesday, October 5th, 2016
மந்திகை சந்தைக்கு முன்பாக தரித்து நிற்கும் வாகனங்களினால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சந்தைக்கு முன்பாகவுள்ள புலோலி சாவகச்சேரி வீதியில் அதிகளவான வாகனங்கள் பிரயாணம் செய்கின்றன. குறிப்பாக பருத்தித்துறை – ஆழியவளை சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் ஏறுவதற்காக பல பயணிகள் சந்தைக்கு முன்பாக நிற்பதனால் அப்பேருந்து சில நிமிடம் அதில் நின்றே செல்கின்றது.
அவ்வாறு நிற்பதனால் வேறு வாகனங்கள் அப்பகுதியால் வரும் போது சந்தைக்கு இடையூறு ஏற்படுவதாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பெற்றோர்களும், எங்கள் சமூகமும் உரிய கவனம் செலு...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச...
உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு அனுசரணை - பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ...
|
|
|


