தனியார் நிறுவனங்களுடன் இன்று அவசர கலந்துரையாடல்!

Tuesday, May 7th, 2019

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் கல்வி நிலைய  நிர்வாகிகள்/இயக்குநர்களை இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஒன்று கூடுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெறும் இக்கலந்தரையாடலில் தனது கல்வி நிறுவனப்பதிவை இதுவரை மேற்கொள்ளாத நிர்வாகிகள் தமது கல்வி நிறுவனம் தொடர்பான விபரங்களை மாகாண கல்வி அமைச்சில் அல்லது தமது கல்வி நிலையம் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பப்படிங்களை (www.np.gov.lk) என்ற வடமாகாண இணையதளத்தில் பார்வையிட முடியும்.

Related posts: