தடை செய்யப்பட்ட பாடல்களை செவிமடுத்தார் எனும் குற்றச் சாட்டில் 25 வயது இளைஞன் கைது!
Friday, April 22nd, 2016தடை செய்யப்பட்ட புலிகளின் பாடல்களைச் செவிமடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை(21-03-2016) மாலை சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வயதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை யாழ். நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய பாடசாலை ஆசிரியர்களின் பதவி உயர்வு; மாகாண பணிப்பாளருக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை
திரிபோஷ சத்துணவுக்கு தட்டுப்பாடு இல்லை-சுகாதார அமைச்சு!
ஆயுர்வேத கூட்டுத்தாபனம் தொடர்பாக ஆராய கோப் குழு தயார்!
|
|