ஜூலை 3 வரை நாளாந்தம் 3 மணி நேர மின்வெட்டு – அனுமதி கொடுத்தது பொது பயன்பாடுகள் ஆணைக்குழு !

Monday, June 27th, 2022

ஜூன் 27 ஆம் திகதிமுதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

CC வலயங்களில் எதிர்வரும் ஜூலை 2, 3 ஆம் திகதிகளை தவிர, காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

MNOXYZ வலயங்களில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது  பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை ஆரம்பம் - ஜனாதிபத...
கொரோனா தடுப்பூசியை கொள்வனவுக்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்!
சுகாதார வழிகாட்டல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை...