ஜூலை 12 ஆம் திகதியுடன் பொதுமன்னிப்பு காலம் நிறைவு!

இராணுத்திலிருந்து தப்பிச் சென்ற 8 ஆயிரத்து 145 இராணுவ வீரர்கள் பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதில், 7415 இராணுவத்தினரும் 417 கடற்படையினரும் 313 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக. அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மாதம் 12 ஆம் திகதி வரை நடைமுறையில் இருப்பதுடன், முப்படைகளிலிருந்தும் சேவையிலிருந்து தப்பிச் சென்றுள்ள வீரர்கள் அதற்கு முன்னர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சண்டிலிப்பாயில் இயங்கிய சுகாதாரமற்ற கோழிப்பண்ணை மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கை - ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!
மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் அத...
|
|