ஜூலை 11 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் – மே 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க வாய்ப்பு!
Saturday, May 9th, 2020
நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு காலஅவகாசம் போதாமையால், தேர்தல் மீண்டுமொரு தடவை ஒத்திவைக்கப்படவுள்ளதாக கூறுப்படுகின்றது.
இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் கட்சி செயலாளர்கள், சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன், எதிர்வரும் 12 ஆம் திகதியன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஜூலை 11 ஆம் திகதியை தேர்தல் நடைபெறும் திகதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் கூறுகின்றன.
Related posts:
பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்...
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!
|
|
|


