ஜனாதிபதித் தேர்தல் – அஞ்சல் வாக்கெடுப்பை செப்டம்பர் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, August 14th, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

அதன்படி செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விசேட நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது

குறித்த மூன்று தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிகமாக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

Related posts: