சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு அபராதம்!
Wednesday, September 21st, 2016
டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த கட்டுவன் பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் இருவருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று (20) தீர்ப்பளித்துள்ளார்.. அத்துடன், வீட்டு உரிமையாளர்களை நீதவான் கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பழை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வீட்டு உரிமையாளர்கள் இருவரும் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.
Related posts:
யாழ். இந்துக் கல்லூரியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்!
உதயங்க வீரதுங்கவுக்கு இன்டர்போல் பிடியாணை!
பாரியளவிலான இயற்கை உர உற்பத்தியில் அம்பாறை பெருந்தோட்ட நிறுவனம் – 25 கிலோ இயற்கை உரம் 25 ரூபா வீதம் ...
|
|