சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெரிவிப்பு!
Monday, July 3rd, 2023சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய கடந்த ஜூன் மாதம் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 7 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்தநிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை!
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு - ருவண்டா ஜனாதிபதியுடனும் சந்திப...
அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துங்கள் - நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வருகின்றது சட்டம்!
|
|