சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!
Tuesday, May 3rd, 2016சுன்னாகத்தில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வட மாகாண சபையின் பிரதம செயலாளருக்கு இன்றைய தினம் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
வடமாகாண சபையின் பிரதம செயலாளருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் ஆஜராகுமாறு மல்லாகம் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யசிங்கம் , சோ.தேவராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமினர் நீதவான் முன்னிலையில் ஆஜராகினர்.
Related posts:
சலுகை அடிப்படையில் வாகனம் வழங்கும் யோசனையில் மாற்றம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தல...
மருந்துவ பொருட்களுக்காக நிதியமைச்சினால் 20 மில்லியன் டொலர் வழங்கப்பட்டது - எதிர்வரும் 3 மாதங்களுக்கு...
|
|
பொலிஸாருக்கு மிளகாய் பொடி வீசி ரி-56 ஆயுதத்தை பறிப்பதற்கு முயற்சி துன்னாலையில் நடுநிசி நேரம் நடந்...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்க...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - புங்குடுதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவி...