சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் பட்டப்பகலில் வீடுடைத்துப் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு 

Friday, May 20th, 2016

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் பட்டப்பகலில்  யாருமில்லாதவேளையில்  வீடொன்றின் முன்கதவையுடைத்து உள்நுழைந்த திருடர்கள் பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர் .

குறித்த திருட்டுச்  சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம்-18 ஆம் திகதி  புதன்கிழமை பகல் வேலை சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் குறித்த வீட்டிற்குச் சென்ற திருடர்கள் கற்களால் மேற்படி வீட்டிற்கு எறிந்து வீட்டில் எவருமில்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் வீட்டின் முன்கதவையுடைத்து உள்நுழைந்து வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். வீட்டின் அலுமாரியைத் திறந்து அதற்குள்ளிருந்த பல ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக் கணனி, இரண்டு நவீன ஐபோன்கள் , புதிய எல்.சி.டி தொலைக்காட்சி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் .

குறித்த வீட்டின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்த நிலையிலும் , வீட்டின் முற்றத்தில் ஏராளமான கற்களும் வீசிய நிலையில் காணப்பட்டன . சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: