சுகாதார விதிமுறை மீறல் கடலுணவுகள், மாம்பழங்கள் மானிப்பாய் சந்தையில் அழிப்பு!
Tuesday, December 20th, 2016
சுகாதார விதிமுறைக்கு முரணான வகையில் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகளையும், மருந்து விசிறிய மாம்பழங்களையும் கைப்பற்றிய சண்டிலிப்பாய் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வியாபாரிகளை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று முன்தினம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மானிப்பாய் மத்திய சந்தையில் சுகாதார விதிமுறைகளுக்கு எதிராக செயற்படுவதாக பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முறையி;டப்பட்டது. அங்கு சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகள், மாம்பழங்களைக் கைப்பற்றி புதைத்து அழித்தனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த மாம்பழ வியாபாரி மாம்பழங்களை விட்டுவிட்டு ஓடி ஓழிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
Related posts:
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
விஸ்வமடு சம்பவம் குறித்து இராணுவம் விளக்கம் -!
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது...
|
|