சுகாதார விதிமுறை மீறல் கடலுணவுகள், மாம்பழங்கள் மானிப்பாய் சந்தையில் அழிப்பு!

Tuesday, December 20th, 2016

சுகாதார விதிமுறைக்கு முரணான வகையில் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகளையும், மருந்து விசிறிய மாம்பழங்களையும் கைப்பற்றிய சண்டிலிப்பாய் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வியாபாரிகளை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று முன்தினம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மானிப்பாய் மத்திய சந்தையில் சுகாதார விதிமுறைகளுக்கு எதிராக செயற்படுவதாக பொதுச்சுகாதார பரிசோதகருக்கு முறையி;டப்பட்டது. அங்கு சென்ற  பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகள், மாம்பழங்களைக் கைப்பற்றி புதைத்து அழித்தனர். இதனை முன்கூட்டியே அறிந்திருந்த மாம்பழ வியாபாரி மாம்பழங்களை விட்டுவிட்டு ஓடி ஓழிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

13-1431496157-1interestingfactsaboutindiathatwillamazeyou

Related posts: