சீனாவின் EXIM வங்கியுடன் இலங்கை உடன்படிக்கை!

சீனாவின் EXIM வங்கியிடம் இருந்து 1.7 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்கீழ் தெற்கு அதிவேக பாதையின் விஸ்தரிப்புக்காக பயன்படுத்தப்படவுள்ளன.
இதற்கான யோசனையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
ஏற்கனவே இலங்கை அரசாங்கம் குறித்த சீன வங்கியுடன் நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.
சீனாவுடன் உறவுகள் சீரற்றுப் போயிருந்தபோதும் இலங்கை அரசாங்கம் 2015ம் ஆண்டு குறித்த சீன வங்கியிடம் கடன்களுக்கான விண்ணப்பத்தை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட ஏற்பாடு!
பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அற...
இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவிப்பு!
|
|