சிவாஜிலிங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு !
Saturday, July 22nd, 2017வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சனிக்கிழமை (22) கொழும்பிற்கு விசாரணைக்கு வருகை தருமாறு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள், பெளத்த பிக்கு ஒருவரை அவதூறாகப் பேசியமை போன்ற விடயங்களுக்காகவே சிவாஜிலிங்கத்தை விசாரணைக்காகக் வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர்.
நேற்று முற்பகல்-11.30 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், குறித்த விசாரணைக்காகக் கொழும்புக்கு வர தான் தயாராகவில்லை எனச் சிவாஜிலிங்கம் பதிலளித்துள்ளார்.
Related posts:
வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!
உயர்தர மாணவர்களுக்கான புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை - ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
நிதிநிலை குறித்த அறிக்கையை பகிரங்கப் படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் - நிதி அமைச்சர் பசி...
|
|