‘சில்ப அபிமானி- 2018’ கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட்டில்!

Thursday, July 5th, 2018

தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் ‘சில்ப அபிமானி- 2018’ என்ற போட்டி தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கைப்பணி போட்டி, கண்காட்சி, விற்பனை சந்தை மற்றும் சர்வதேச கைப்பணி கண்காட்சியாக இது நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் விற்பனைக்கூடங்களை அமைக்கவிரும்புவோர் விண்ணப்பிக்கமுடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை தலைவர், தேசிய அருங்கலைகள் பேரவை, றொகினா மாவத்தை, பெலவத்த பத்தரமுல்லையில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.
அத்துடன் இதற்கான உதவிப்பணிப்பாளர், தம்மிக்க சமரசிங்கவுடன் 0112 784424 மற்றும் 0779786916 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்புகொள்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

Related posts: