சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணுக்கு விளக்கமறியல்!

Wednesday, October 12th, 2016

யாழ். சிறைச் சாலைக்குள் கஞ்சாவைக் கடத்த முயன்ற இளம்பெண்ணொருவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(11) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும்-25 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி பெண்ணின் கணவர் வழக்கொன்றுடன் தொடர்புடைய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச் சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது கணவரைப் பார்ப்பதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை குறித்த பெண் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற போது கணவருக்கு வழங்கவெனச் சில பொருட்களையும் கொண்டு சென்றுள்ளார். இதன் போது வழமையான சோதனை நடவடிக்கையாக குறித்த பெண் கொண்டு சென்ற பொருட்களும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன் போது சவர்க்காரக் கட்டியொன்றைப் பிளந்து அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய கஞ்சாப் பொதி மீட்கப்பட்டது. இதனையடுத்துக் குறித்த பெண்ணைச் சிறைச் சாலை உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து மேற்கண்டவாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Court-rules-e1444231072605

Related posts: