சிறுமியைத் தாக்கிய வளர்ப்புத் தாய்க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
Friday, October 7th, 2016நீர்வேலிப் பகுதியில் 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாயை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.
நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி காலை, முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நேற்று வியாழக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் தாய் உயிரிழந்தமையால், தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார். அவ்வாறு இரண்டாம் தரமாக மணமுடித்த பெண்ணே, சிறுமியை மிக மூர்க்கதனமாக தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|