சாரதி சேவை தரம் 3 இல் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!

Wednesday, December 6th, 2017

வடக்கு மாகாண இணைந்த சாரதி சேவை தரம் 3 இல் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திறந்த போட்டிப் பரீட்சை நடத்த ஆளுநரின் அனுமதி பெறப்பபெவுள்ளது என அண்மையில் தெரிவிக்கப்பட்டகிறது

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் சாரதிகள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. பொதுவான ஒரு தெரிவின் அடிப்படையில் சாரதிகள் தெரிவு செய்யப்பட்டு திணைக்களங்களுக்கு சேவையில் அமர்த்தப்படுவர்.

ஆகவே இவர்களுக்கான பொது விதிமுறைகளை உள்ளடக்கிய வடக்கு மாகாண இணைந்த சாரதி சேவை பிரமாணக் குறிப்புத் தயாரிக்கப்பட்டு ஆளுநரின் அனுமதி பெறப்பட்டது. சாரதி சேவை வகுப்பு 3 இல் காணப்படும் 36 வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் திணைக்களங்களில் உள்ள சாரதிகளின் பற்றாக்குறை நீக்கப்படும். இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு திறந்த போட்டிப் பரீட்சை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே ஆளுநரின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: