யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!

Monday, March 22nd, 2021

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நோயாளியிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இன்று மேற்கொள்ளவுள்ள பி.சி.ஆர் பரிசோதையின் பின்பே அவர் கொவிட்-19 நோய் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பெண் அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறலையடுத்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: