சமூக விஞ்ஞானத்தில் சான்றிதழ் கற்கைநெறி டிப்ளோமாவுக்கு அனுமதிப்பதற்கு விண்ணப்பம்!

Saturday, April 28th, 2018

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் சமூக விஞ்ஞானத்தில் சான்றிதழ் கற்கைநெறி டிப்ளோமாவுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கு தரம் 9 வரையான கனிஸ்ட இரண்டாம் நிலை அல்லது ஆரம்பக் கல்வி பூர்த்தியுடன் குறைந்தது 2 வருடங்களுக்கு சமமான சான்றிதழ் வழங்கப்பட்ட வேலை அனுபவம் இருக்க வேண்டும்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கும் இந்த கற்கைநெறியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கற்கைநெறி டிப்ளோமாவிற்கு அனுமதி பெறுவதற்கு அடிப்படை மொழியாற்றலுடன் 18 வயதை அடைந்தவராக இருத்தல் போதுமானதாகும்.

இந்தக் கற்கைநெறி கண்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பதுளை, வுவனியா ஆகிய மாவட்டங்களில் இலங்கை திறந்த பல்கலைக்கழக பிராந்திய கற்கை நிலையங்களிலும் இடம்பெறும்.

கற்கைநெறியைப் பூர்த்தி செய்து கொள்ளும் மாணவர்கள் கலைமாணி பட்டப்படிப்புக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் கற்கைநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இந்த கற்கை நெறியைப் பூர்த்தி செய்பவர்கள் சட்டமாணி மற்றும் முகாமைத்துவமாணி கற்கை நெறிகளுக்காக நடத்தப்படும் அனுமதி பரீட்சையையும் மேற்கொள்ள தகுதியுடையவராவர். இந்தக் கற்கை நெறிக்கான காலம் இரண்டு வருடங்களாகும்.

சமூக விஞ்ஞானத்தில் கற்கைநெறி டிப்ளோமாவிற்கான விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து மே மாதம் 22 ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு நிலையத்தின் 0112881256, 0112881327 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: