சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் கைது!
Thursday, September 22nd, 2016
யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் நேற்றுப் பகல் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓடியவர்கள், ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தத் தவறியவர்கள், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் என ஐவர் கைது செய்யப்பட்டுத் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
Related posts:
உச்சபட்ச பாதுகாப்புடன் வாக்களிப்பிற்கான ஏற்பாடுகள் அனைத்தும்பூர்த்தி - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
ஜனாதிபதி மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை - அரசாங்ம் திட்டவ...
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளது - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர ...
|
|