சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் கைது

யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற சாரதியொருவர் நேற்று கடந்த வெள்ளிக்கிழமை(02) காங்கேசன்து றை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். வயாவிளான் பிரதேசத்திலிருந்து குரும்பசிட்டிப் பகுதியூடாக சட்தவிரோதமான முறையில் கல் அகழ்ந்து செல்வதாக காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் குரும்பசிட்டிப் பகுதியில் வைத்துக் குறித்த உழவியந்திரத்தை மறித்துச் சோதனையிடப்பட்டது. குறித்த சோதனை நடவடிக்கையின் போது உழவியந்திரத்தில் அனுமதியின்றிக் கல் ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்துச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உழவியந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
மரணத்தில் சந்தேகம்: இரண்டு வருடங்களின் பின்னர் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது!
மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான சோதனை தொடரும்..!
விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை!
|
|
ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ...
அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடன் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் - எதிர்வரும் 29 ஆ...
உள்ளுராட்சி தேர்தலுக்கு 10 பில்லியன் செலவாகும் - நிதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் சம...