கோர விபத்து:மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன்!

Thursday, August 25th, 2016

சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடந்த குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பாரியளவு சேதமடைந்துள்ள போதிலும், அதில் பயணித்தவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: