கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான அனுமதியற்ற பஸ் சேவைக்கு தண்டப் பணம் ரூபா 2 லட்சம்!
Sunday, March 4th, 2018வழித்தட அனுமதியின்றி யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான அதிகரித்த தண்டத்தை நீதிமன்றங்கள் விதிக்க ஆரம்பித்து விட்டன. இந்தக் குற்றத்துக்கு 2 லட்சம் ரூபா தண்டமாக அறவிடப்படுகின்றது.
இந்த வாரம் மாத்திரம் அனுமதியின்றி சேவையில் ஈடுபட்ட 4 பேருந்துகளின் சாரதிகளுக்கு 8 லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திருத்தியமைக்கப்பட்ட சட்ட ஏற்பாட்டின்படி, அதிகரித்த தொகையான 2 லட்சம் ரூபாவை தண்டமாக நீதிமன்றங்கள் அறவிடத் தொடங்கியுள்ளன.
வழித்தட அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபா மட்டுமே தண்டமா விதிக்கப்பட்டு வந்தது.
Related posts:
நெடுந்தீவில் ஆசிரியை கடத்தல் இருவர் கைதாகி பொலிஸ் காவலில்!
1,000 ரூபாயை சம்பளம் வழங்காவிட்டால் கம்பெனிகள் கையகப்படுத்தப்படும் - தோட்டக் கம்பெனிகளுக்கு அரசாங்கம...
பலத்த காற்று வீசக்கூடும் –இலங்கை முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள காலநிலை அவதான நிலையம்!
|
|