கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான அனுமதியற்ற பஸ் சேவைக்கு தண்டப் பணம் ரூபா 2 லட்சம்!

Sunday, March 4th, 2018

வழித்தட அனுமதியின்றி யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான அதிகரித்த தண்டத்தை நீதிமன்றங்கள் விதிக்க ஆரம்பித்து விட்டன. இந்தக் குற்றத்துக்கு 2 லட்சம் ரூபா தண்டமாக அறவிடப்படுகின்றது.

இந்த வாரம் மாத்திரம் அனுமதியின்றி சேவையில் ஈடுபட்ட 4 பேருந்துகளின் சாரதிகளுக்கு 8 லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் திருத்தியமைக்கப்பட்ட சட்ட ஏற்பாட்டின்படி, அதிகரித்த தொகையான 2 லட்சம் ரூபாவை தண்டமாக நீதிமன்றங்கள் அறவிடத் தொடங்கியுள்ளன.

வழித்தட அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு முன்னர் 10 ஆயிரம் ரூபா மட்டுமே தண்டமா விதிக்கப்பட்டு வந்தது.

Related posts: